நடிகர் செந்திலுக்கு கொரோனா!! -வைத்தியசாலையில் அனுமதி-

ஆசிரியர் - Editor II
நடிகர் செந்திலுக்கு கொரோனா!! -வைத்தியசாலையில் அனுமதி-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நடிகர் செய்தில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நகைச்சுவையாக கவுண்டமணி – செந்தில் கூட்டணி இருந்தது. செந்தில் தற்போது சுரேஸ் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துவந்தார்.

மேலும் அவர் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் செந்திலும் அவரது மனைவி கலைச்செல்வியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்றுவரும் இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு