யாழ்.மாநகரில் போலி மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை..! பிரபல மதுபானத்தின் பெயரில் போலி மதுபானம் உற்பத்தி, ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் போலி மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை..! பிரபல மதுபானத்தின் பெயரில் போலி மதுபானம் உற்பத்தி, ஒருவர் கைது..

யாழ்.நகரில் இயங்கிவந்த சட்டவிரோத போலி மாதுபான உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், தயாரிக்கப்பட்ட பெருமளவு மதுபானம், போத்தல்கள் கைப்பற்றப்பட்டிருப்பதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அருகில் உள்ள விடுதியில் பிரபல மதுபானங்களின் பெயரில் போலியான மதுபானம் தயாரிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனி பாணி, எதனால், எசன்ஸ் உள்ளிட்ட மூலப்பொருட்களை கொண்டு குறித்த போலி மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் அங்கிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன், 

போலி மதுபானம் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவு பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு