டி வில்லியர்ஸ் அதிரடி!! -மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்.சி.பி-

ஆசிரியர் - Editor II
டி வில்லியர்ஸ் அதிரடி!! -மும்பையை வீழ்த்தி முதல் வெற்றி பெற்றது ஆர்.சி.பி-

டிவில்லியர்ஸ் அதிரடியால் மும்பையை வீழ்த்தி விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது. 

ஐ.பி.எல் சீசனின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி நாணயசுழல்ச்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ஓட்டங்களை பெற்றது. பெங்களூரு அணி சார்பில் ஹர்சல் பட்டேல் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில் 27 ஓட்டங்களை; விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

160 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்.சி.பி களமிறங்கியது. டி வில்லியர்ஸ் முதலில் நிதானமாக ஆடினார். அதன்பின் அதிரடி காட்டி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் ஆர்.சி.பி அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்களை எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு