அடுத்த 4 வாரங்களும் மிகவும் ஆபத்தானவை!! -இந்திய மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை-

ஆசிரியர் - Editor II
அடுத்த 4 வாரங்களும் மிகவும் ஆபத்தானவை!! -இந்திய மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை-

கொரோனா வைரஸ் பரவலின் அதிகரிப்பால் அடுத்த 4 வாரங்களும் மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்செரிக்கை செய்துள்ளது. 

செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே மத்திய சுகாதாரத்துறையினரால் மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்:- 

கொரோனாவின் 2 ஆவது அலை முதல் அலையை விட வேகமாக பரவுகிறது. இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு அவசியம். அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும். 

நாட்டு மக்கள் ஒன்றிணைந்து கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா பாதிப்பால் ஏற்படும் பலி எண்ணிக்கையை குறைப்பதுதான் தடுப்பூசியின் முக்கிய நோக்கம் என்றார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு