கமலுடன் சென்ற சுருதிக்கு எதிராக முறைப்பாடு!!

ஆசிரியர் - Editor II
கமலுடன் சென்ற சுருதிக்கு எதிராக முறைப்பாடு!!

தேர்தல்கள் சட்ட விதிமுறைப்படி வேட்பாளர் மற்றும் அவரது அனுமதி பெற்ற முகவர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல வேண்டும். இருப்பினும் விதியை மீறி சுருதிஹாசன் சென்றுள்ளதாக பாரதிய ஜனதாவினர் முறையிட்டுள்ளனர். 

கோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிடும் வாக்குச்சாவடிகளுக்கும், கெம்பட்டி காலனியில் உள்ள வாக்குச்சாவடிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். 

இதன் போது கமலுடன் அவரது மகள் சுருதிஹாசனும் வாக்குச்சாவடிக்குள் சென்றார்.

இதுதொடர்பாக கோவை மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் நந்தகுமார், தெற்கு சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறைப்பாட்டு மனு கொடுத்தார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு