செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை கோபத்தில் பிடுங்கிய அஜித்!!

ஆசிரியர் - Editor II
செல்பி எடுத்த ரசிகரின் செல்போனை கோபத்தில் பிடுங்கிய அஜித்!!

மனைவியுடன் வாக்களிக்க சென்ற நடிகர் அஜித்துடன் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது அஜித் திடீரென செல்போனை பிடுங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஆரம்பமானது. திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் அஜித், தனது மனைவி சாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயற்சி செய்தார். இதனால் கோபமடைந்த அஜித் அவரது செல்போனை பிடிங்கிக் கொண்டார்.

மேலும் கோபத்தில் ரசிகர்கள் அனைவரையும் வெளியே செல்லும்படியும் சைகை மூலம் கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு