பெற்ற மகளை துஷ்பிரயோகம் செய்து தாய் ஆக்கிய தந்தை..! மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு..

ஆசிரியர் - Editor I
பெற்ற மகளை துஷ்பிரயோகம் செய்து தாய் ஆக்கிய தந்தை..! மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு..

பெற்ற மகளை துஷ்பிரயோகம் செய்து குழந்தை பிரசவிக்க காரணமாக இருந்த தந்தைக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டணை வழங்கி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். 

குறித்த தீர்ப்பு நேற்றய தினம் வழங்கப்பட்டுள்ளது. தந்தை தகாத முறையில் நடந்தமை தொடர்பில் சிறுமியின் சாட்சியத்தின் பின்னர் மன்றில் ஆஜராகாது தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை குற்றவாளியென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சந்தேகநபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 5 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்குமாறும் இதனை வழங்க தவறும் பட்சத்தில் மேலும் 2 வருடம் சிறைத்தண்டனை வழங்கப்படுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் கைது செய்யுமாறு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு