யாழ்.திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தையை சூழ 127 தொற்றாளர்கள்..! இன்று அடையாளம் காணப்பட்ட 143 தொற்றாளர் விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தையை சூழ 127 தொற்றாளர்கள்..! இன்று அடையாளம் காணப்பட்ட 143 தொற்றாளர் விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 143 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்கள் மற்றும் பிரதேசங்கள் குறித்த தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். 

இதன்படி 743 பேருக்கு யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இவர்களில் 127 பேர் திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்களை சேர்ந்த வியாபாரிகளாவர். மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 11 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 7 பேர் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட பொதுமக்கள், 

மேலும் 4 போில் 3 பேர் மருத்துவ மாணவர்கள் எனவும், ஒருவர் தாதிய மாணவர் எனவும் பணிப்பாளர் கூறியிருக்கின்றார். அதேபோல் சாவகச்சோி வைத்தியசாலையில் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு