யாழ்.மாநகரில் முடக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்களுக்கு நாளை PCR பரிசோதனை..! வர்த்தகர்கள் கோரிக்கை அங்கஜன் நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் முடக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்களுக்கு நாளை PCR பரிசோதனை..! வர்த்தகர்கள் கோரிக்கை அங்கஜன் நடவடிக்கை..

யாழ்.மாநகரில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருந்த நிலையில் மாநகரின் ஒரு பகுதி முடக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பூட்டப்பட்டுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை துரிதகதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பாக யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்த நிலையில், சுகாதார பிரிவினருடன் நடத்திய பேச்சு அடிப்படையில் உடனடியாக பீ.சி.ஆர் பரிசோதனைகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. 

இதன்படி நாளை 28ம் திகதி ஞாயிற்று கிழமை காலை 7 மணி தொடக்கம் நவீன சந்தை கட்டிட தொகுதியில் குறித்த பீ.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கை இடம்பெறவுள்ள நிலையில், வர்த்தக சமூகம், வர்த்தகர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ்.மாநகரச சுகாதார வைத்திய அதிகாரி ரி.பாலமுரளி கேட்டள்ளார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு