பொது வைத்தியசாலை தாதியர்கள் இருவருக்கு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி..! தொடர்புகளை பேணிய சிலர் தனிமைப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
பொது வைத்தியசாலை தாதியர்கள் இருவருக்கு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி..! தொடர்புகளை பேணிய சிலர் தனிமைப்படுத்தலில்..

வவுனியா - பொதுவைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகஸ்த்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் பணி புரியும் தாதியொருவருக்கு அன்ரிஜென் பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, அவருடன் நெருங்கிப் பழகிய மற்றொரு தாதிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இருவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுப்பதற்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த தாதியர்களுடன் தொடர்புகளைப் பேணிய சிலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட தாதியர் இருவரையும் கிளிநொச்சி மற்றும் கொழும்பில் அமைந்துள்ள கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு