பளை - இயக்கச்சி பகுதியில் கோர விபத்து..! இரு குழந்தைகள் உயிரிழப்பு, தந்தை ஆபத்தான நிலையில்...

ஆசிரியர் - Editor I
பளை - இயக்கச்சி பகுதியில் கோர விபத்து..! இரு குழந்தைகள் உயிரிழப்பு, தந்தை ஆபத்தான நிலையில்...

பளை - இத்தாவில் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிய திசையில் கார் காணப்படுவதாவும் அதற்கு நேரெதிரே டிப்பர் காணப்படுவதாகவும் கூறியுள்ள பொலிஸார் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிய ரிப்பர் காருடன்  மோதி விபத்து இடம் பெற்றிருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 9 மற்றும் 12 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவரே உயிரிழந்திருக்கின்றனர். சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த சிறுவர்களின் சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு