இ.போ.ச பேருந்து சேவைகள் வீரசிங்கம் மண்டபத்தின் முன்னால் இருந்து நடக்கும்..! அடுத்த 10 நாட்களுக்கு...

ஆசிரியர் - Editor I
இ.போ.ச பேருந்து சேவைகள் வீரசிங்கம் மண்டபத்தின் முன்னால் இருந்து நடக்கும்..! அடுத்த 10 நாட்களுக்கு...

யாழ்.மாநகரம் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இ.போ.ச சேவைகளை வீரசிங்கம் மண்டபத்தின் முன்னால் இருந்த நடத்துவதற்கு இ.போ.ச தீர்மானித்துள்ளது.

மாநகரில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து மாநகரின் ஒரு பகுதி முடக்கப்பட்டிருப்பதுடன்,

பேருந்து சேவைகளை நகரின் மத்தியிலிருந்து அப்புறப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும்  நகரின் மத்தியிலிருந்து வெளியேறமாட்டோம் என இ.போ.ச கூறியிருந்தது.

ஆனாலும் மாவட்ட கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் தீர்மானத்தை மீற முடியாத நிலையில் இ.போ.ச பேருந்துகள் அடுத்த 10 நாட்களுக்கு வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக இருந்து சேவையில் ஈடுபடும்.

அதே சமயம் தனியார் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடவுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு