பேராபத்தில் யாழ்.மாநகரம்..! மாநகரில் மட்டும் 77 தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர், வடக்கில் 80 பேருக்கு தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
பேராபத்தில் யாழ்.மாநகரம்..! மாநகரில் மட்டும் 77 தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர், வடக்கில் 80 பேருக்கு தொற்று உறுதி..!

யாழ்.மாவட்டத்தில் 79 பேர் உட்பட வடமாகாணத்தில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

விடயம் தொடர்பாக பணிப்பாளர் மேலும் கூறுகையில் 677 பேருக்கு யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் மற்றும், யாழ்.போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 80 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

அவர்களில் 79 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள், மேலும் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவராவார். மேலும் யாழ்.மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான 79 போில் 77 பேர் யாழ்.மாநகரை சேர்ந்தவர்கள். 

யாழ்.நகரில் நவீனசந்தை தொகுதியில் 107 போிடம் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் மாநகரில் தொற்றாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த 11 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 

மேலும் சண்டிலிப்பாய் பகுதியில் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் மற்றும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் நோய் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு