யாழ்.மாவட்டத்தில் நிலமை மோசமாகிறதா..? சற்று முன்னர் அவசர.. அவசரமாக.. கூடியது மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் நிலமை மோசமாகிறதா..? சற்று முன்னர் அவசர.. அவசரமாக.. கூடியது மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி...

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவிவரும் நிலையில் அவசரமாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி சற்று முன்னர் மாவட்ட செயலகத்தில் கூடியுள்ளது. 

யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன், யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி, மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், மற்றும் சுகாதார பிரிவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருக்கின்றனர். 

மாவட்டத்தில் பரவலாக தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அவசரமான தீர்மானங்களை எடுப்பதற்காக இந்த செயலணி சற்று முன்னர் அவசர அவசரமாக கூடியிருக்கின்றது. 

இதேவேளை இன்றைய தினமும் அதிகளவான தொற்றாளர்கள் மாவட்டத்தில் குறிப்பாக யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு