யாழ்.நெடுந்தீவு கடற்பகுதிக்குள் நுழைந்த 20 இந்திய மீனவர்கள் அதிரடியாக கைது..! படகுகளும் பறிமுதல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு கடற்பகுதிக்குள் நுழைந்த 20 இந்திய மீனவர்கள் அதிரடியாக கைது..! படகுகளும் பறிமுதல்..

இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து யாழ்.நெடுந்தீவு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 20 தமிழக மீனவர்களை கடற்படை கைது செய்துள்ளதுடன், படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. 

குறித்த சம்பவம் நேற்றய தினம் இரவு இடம்பெற்றிருக்கின்றது. கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மீனவர்கள் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், 

மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளுடன் தனிமைப்படுத்தப்படுவதற்காக அவர்கள் இலங்கை மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை இந்திய மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு