தீப்பெட்டி கணேசன் பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்ற லாரன்ஸ்!!

ஆசிரியர் - Editor II
தீப்பெட்டி கணேசன் பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்ற லாரன்ஸ்!!

உடல்நலக்குறைவால் தீப்பெட்டி கணேசன் மரணமடைந்த நிலையில், அவரது பிள்ளைகளில் கல்விக்கான செலவை தான் பொறுப்பேற்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பின் பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 

இதன்பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், பொருளாதாரத்தில் நலிவடைந்த அவர் பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் கடந்த திங்களன்று உயிரிழந்தார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் லாரன்ஸ் தெரிவிக்கையில்:- நடிகர் தீப்பெட்டி கணேசன் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். 

அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இனி வரும் காலத்திலும் என்னால் இயன்ற வறையிலான உதவிகளை அவரின் குழந்தைகளுக்கு செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன் என்றார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு