தொல்லியல் ஆய்வு பணிகளை மிக தீவிரமாக எதிர்த்த பொதுமக்கள்..! ஆய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது, உருத்திரபுரத்தில் காலையில் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
தொல்லியல் ஆய்வு பணிகளை மிக தீவிரமாக எதிர்த்த பொதுமக்கள்..! ஆய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது, உருத்திரபுரத்தில் காலையில் பதற்றம்..

கிளிநொச்சி - உருத்திரபுரம் சிவன் கோவில் வளாகத்தில் நடத்தப்படவிருந்த தொல்லியல் ஆய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது. 

உருத்திரபுரம் சிவன் கோவில் வளாகத்தில் தொல்லியல் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக இன்றைய தினம் அதிகாரிகள் குழு பொலிஸ் பாதுகாப்புடன் வந்திருந்த நிலையில், 

இந்நிலையில் குறித்த பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டம் நடத்திவரும் மக்கள் தொல்லியல் ஆய்வு பணிகளுக்கு கடும் எதிர்ப்பு தொிவித்தனர். 

கோவில் வளாகத்தின் பிரதான வாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆலயத்திற்குள் தொல்லியல் பிரிவினரை உள்நுழைய விடாது தடுத்தனர். 

இதன்போது அங்கு வருகைதந்திருந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடனும், வருகை தந்திருந்த அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 

அமைதி நிலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பொதுமக்களின் எதிர்ப்புக்கான காரணம் தொடர்பில் இதன்போது பொலிசாரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 

தொடரந்து குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு இரு தரப்பினரையும் அழைத்து சுமுகமான முறையில் தீர்ப்பது தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் கூடியிருந்த பொது மக்களால் மகஜர் ஒன்றும் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வருகை தந்திருந்த 

தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தரிமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், இன்றைய அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த தெர்ல்லியல் அமைவிட பகுதியில் எவ்வித மாற்றங்களையும் செய்யக்கூடாது எனவும், மேலதிக விசாரணை மற்றும் நடவடிக்கைகள் வரை 

எவ்வித அகழ்வு பணிகளும் இடம்பெறாது எனவும் பொலிஸார் வாக்குறுதி அழித்திருந்ததாக கிளிநொச்சி சிம்மயா மிசன் சுவாமிகள் சுவாமி சிவேந்திர சைதன்யா தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு