யாழ்.மாநகரில் உள்ள சந்தை தொகுதி மறு அறிவித்தல் வெளியாகும் வரை முடக்கப்படுகிறது..! மாகாண சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் உள்ள சந்தை தொகுதி மறு அறிவித்தல் வெளியாகும் வரை முடக்கப்படுகிறது..! மாகாண சுகாதார பிரிவு அதிரடி நடவடிக்கை..

யாழ்.மாநகரில் உள்ள சந்தை தொகுதி மறு அறிவித்தல் வெளியாகும் வரையில் முடக்கப்படுவதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். 

மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரம் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார். யாழ்.மாநகர மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டன. 

அவர்களில் 9 வியாபாரிகளுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 உள்ளூர் உற்பத்திப் பொருள்கள் (பனம் பொருள்கள்) வியாரிகளும், மூவர் மரக்கறி வியாபாரிகளும் அடங்குகின்றனர். 

அதனால் சந்தைத் தொகுதியின் அத்தனை வியாபாரிகளும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு