இந்தியா வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கியது..! மக்களவை தேர்தலில் எதிரொலிக்குமா? பல ஆசிய நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகின..

ஆசிரியர் - Editor I
இந்தியா வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கியது..! மக்களவை தேர்தலில் எதிரொலிக்குமா? பல ஆசிய நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகின..

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்பட்ட 46/1 பிரேரணை 21 நாடுகளின் ஆதரவினால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 

இதேவேளை இந்தியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகள் குறித்த தீர்மானத்திற்கான வாக்களிப்பில் பங்கெடுப்பதை தவிர்த்திருக்கின்றன. 

இலங்கையில் அதிகரித்துவரும் சீன தலையீட்டை கருத்தில் கொண்டும் இந்திய மாநிலங்களவை தேர்தலை அடிப்படையாக கொண்டும்

இந்தியா இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கும் என ஒரு சாராரும், அவ்வாறில்லை இந்தியா இலங்கையுடனான நட்புறவை தொடர விரும்பும் நிலையில்

நடுநிலை வகிக்கும் எனவும் கருத்துக்கள் கூறப்பட்ட நிலையில் இந்தியா வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் தவிர்த்திருக்கின்றது. 

இந்தியாவின் தீர்மானம் இலங்கை ஆட்சியாளர்களாலும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களாலும் உன்னிப்பாக காண்காணிக்கப்பட்ட நிலையில் இந்தியா இந்த தீர்மானத்தை எடுத்திரக்கின்றது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு