கர்ணன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரி வழக்கு!!

ஆசிரியர் - Editor II
கர்ணன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரி வழக்கு!!

பிலபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஸ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அந்த படத்தில் இடம்பெற்ற பாடல் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை புண்படுத்தும் விதமாக இருந்ததாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிமன்றம், திரைப்படத் தணிக்கைத் துறை, தயாரிப்பாளர், இயக்குனர், பாடலை வெளியிட்ட திங் மியூசிக் இந்தியா யூடியூப் சேனல் ஆகியோர்க்கு அழைப்பானை அனுப்பியது.

இந்த நிலையில் தற்போது பாடலை நீக்காமல் படத்தை வெளியிடக் கூடாது என்று இடைக்காலத்தடை விதிக்க கோரி வழக்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு