யாழ்.மாவட்டத்தில் இரு பெண்கள் உட்பட 3 பேருக்கு தொற்று, ஒரு மரணம் பதிவு..! விபரம் வெளியானது...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இரு பெண்கள் உட்பட 3 பேருக்கு தொற்று, ஒரு மரணம் பதிவு..! விபரம் வெளியானது...

யாழ்.மாவட்டத்தில் 3 பேர் உட்பட வடமாகாணத்தில் 4 பேருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் சுதுமலையை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவராவார். மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 83 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. குறித்த பெண் கொக்குவில் பகுதியை சேர்ந்தவராவார். மேலும் யாழ்.மாநகரில் 32 வயதான பெண் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த பெண் ஏற்கனவே தொற்றுக்குள்ளான ஒருவருடன் தொடர்பில் இருந்தவர். மேலும் சண்டிலிப்பாய் பகுதியில் அடையாளம் காணப்பட்ட ஒருவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளான ஒருவருடன் தொடர்பில் இருந்தவர். மேலும் மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கு

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு