யாழ்.நல்லுாரில் 3 குடும்பங்களை சேர்ந்த 6 பேருக்கு தொற்று..! பளையிலிருந்து பெயின்ட் அடிக்க வந்தவர்கள் மூலம் தொற்றா? விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுாரில் 3 குடும்பங்களை சேர்ந்த 6 பேருக்கு தொற்று..! பளையிலிருந்து பெயின்ட் அடிக்க வந்தவர்கள் மூலம் தொற்றா? விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 13 பேர் உட்பட வடமாகாணத்தில் 16 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் குறித்த விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார். 

இது குறித்து பணிப்பாளர் மேலும் கூறியுள்ளதாவது, யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 290 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 16 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 3 வீடுகளில் வர்ணப்பூச்சு வேலைக்காக பளையிலிருந்து ஒருவர் வந்து சென்றுள்ளார். 

அவர் மூலமே இவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலையில் உள்ள சாரதிப் பயிற்சிப் பாடசாலையைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தொற்றாளருடன் நேரடித் தொடர்புடையவர். ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மெலிஞ்சிமுனையில் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அவர்கள் ஏற்கனவே கண்டறியப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் . மன்னாரில் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு