கொரோனா பரவல் அபயத்தை கட்டுப்படுத்த தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ சோதனை சாவடிகள் நிரந்தரமாக்கப்படுகிறது..!

ஆசிரியர் - Editor I
கொரோனா பரவல் அபயத்தை கட்டுப்படுத்த தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ சோதனை சாவடிகள் நிரந்தரமாக்கப்படுகிறது..!

ஓமந்தை பகுதியில் கொரோனா பரவல் அபாயம் நிலவும் காலத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனை சாவடியை நிரந்தரமாக அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் கடந்த வருடகாலமாக கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து காணப்பட்டமையால், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் மக்களை கண்காணிப்பதற்காக 

வவுனியாவில் ஓமந்தை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில், தற்காலிக இராணுவச் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டன. நாட்டில் ஊடரங்கு தளர்த்தப்பட்டு வழமையான செயல்பாடுகளை முன்னெடுக்க 

அனைத்து மக்களும் தற்போது ஆரம்பித்து விட்டனர்.இந்நிலையில் வவுனியா- ஒமந்தையில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியை நிரந்தரமாக்கும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

ஓமந்தை வீதிக்கு அருகிலுள்ள கரையில், சீமெந்திலான தளம் அமைக்கப்பட்டு, இரண்டு நிரந்தர கொட்டகைகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்.

என மக்கள் சுட்டிக்காட்டினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு