திடீரென கனமழையுடன் மினி சூறாவளி..! 5 வீடுகள் சேதம். மீட்பு நடவடிக்கையில் பிரதேசசபையினர்..

ஆசிரியர் - Editor I
திடீரென கனமழையுடன் மினி சூறாவளி..! 5 வீடுகள் சேதம். மீட்பு நடவடிக்கையில் பிரதேசசபையினர்..

கிளிநொச்சியில் இன்று மதியம் வீசிய மினி சூறாவளியினால் 5 வீடுகள் சேதமடைந்துள்ளது. மேலும் திடீரென கனமழையும் பெய்திருக்கின்றது. 

கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவத்தினால் இரண்டு தற்காலிக வீடுகள் முழுமையாகவும் மூன்று நிரந்தர வீடுகள் பகுதியளவிலும் சேதம் அடைந்துள்ளது. 

சம்பவத்தை அடுத்து கரைச்சி பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு குறித்த விடயம் தொடர்பில் அறவிக்கப்பட்ட நிலையில் 

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் நடவடிக்கையை பிரதேச செயலகம் முன்னெடுத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு