கொரோனாவை பரவச் செய்த படப்பிடிப்பு!! -விஜய் சேதுபதி படத்துக்கு அபராதம்-

ஆசிரியர் - Editor II
கொரோனாவை பரவச் செய்த படப்பிடிப்பு!! -விஜய் சேதுபதி படத்துக்கு அபராதம்-

திண்டுக்கல்லில் நடந்த விஜய்சேதுபதி சினிமா படப்பிடிப்பை பார்ப்பதற்கு பெருமளவு ரசிகர்கள் திரண்டுள்ளதை அடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

திண்டுக்கல் மாநகராட்சி நகர்நல அலுவலர் தலைமையிலான சுகாதார துறையினர் அங்குள்ள பஸ்நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு நின்று கொண்டிருந்தனர். 

அங்கு நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படத்தின படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தது. இதனால் ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் அங்கு குவிந்தது தெரியவந்தது.

மேலும் அதில் பலர் முக கவசம் அணியவில்லை. இதுமட்டுமின்றி சமூக இடைவெளியை மறந்து அனைவரும் நெருக்கமாக நின்றுள்ளனர். இதனால் படக்குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு