யாழ்.மாவட்ட செயலகத்தில் நாளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கிறார் டக்ளஸ்..! நாளை மறுதினம் ஜனாதிபதியை சந்திக்கிறார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட செயலகத்தில் நாளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கிறார் டக்ளஸ்..! நாளை மறுதினம் ஜனாதிபதியை சந்திக்கிறார்..

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து ஆராய்வதுடன் தம்மை சந்திக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ வழங்கிய உத்தரவுக்கமைய நாளை காலை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அமைச்சர் டக்ளஸ் சந்திக்கவுள்ளார். 

யாழ்.மாவட்ட செயலகத்தில் குறித்த சந்திப்பு நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. மேலும் குறித்த சந்திப்பில் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 150 பேருக்கு மேல் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகின்றது. 

இதேவேளை வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைச்சர் டக்ளஸை சந்திக்கப்போவதில்லை. என ஊடகங்கள் வாயிலாக அறிவித்திருக்கும் நிலையில் நாளை சந்திப்பில் கலந்து கொள்ளப்போவது யார்? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில் நாளை காலை சந்திப்பு

இடம்பெறவுள்ளதுடன், நாளைய சந்திப்பில் பெறப்படும் தகவல்களுடன் நாளை மறுதினம் ஞாயிற்று கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு