அபகரிக்கப்பட்டிருந்த 133 ஏக்கர் காணியை உரிமையாளர்களிடம் வழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..! மகிழ்ச்சியில் மக்கள்..

ஆசிரியர் - Editor I
அபகரிக்கப்பட்டிருந்த 133 ஏக்கர் காணியை உரிமையாளர்களிடம் வழங்கினார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..! மகிழ்ச்சியில் மக்கள்..

கிளிநொச்சி - பூநகரி ஜெயபுரம் பகுதியில் வனவள திணைக்களம் அபகரித்துவைத்திருந்த சுமார் 133 ஏக்கர் காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டிரக்கின்றது. 

குறித்த நிகழ்வு இன்று காலை 10.00மணிக்கு பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன் தலைமையில் ஜெயபுரம் வடக்கு கிராமசேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கலந்து கொண்டு காணிக்கான அனுமதியை மக்களிடம் கையளித்திருந்தார். இந்நிகழ்வில் மாவட்ட காணி பதில் அரசாங்கதிபர், 

கிராமசேவையாளர், அரச உத்தியோகத்தர்கள் மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவான்ந்தா காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் 

மற்றும் மனித உரிமைகள் விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு