யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவன், மானிப்பாய் வைத்தியசாலை ஊழியர் உட்பட யாழ்.மாவட்டத்தில் 8 பேருக்கு தொற்று உறுதி..! வடக்கில் 13 பேருக்கு தொற்று..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவன், மானிப்பாய் வைத்தியசாலை ஊழியர் உட்பட யாழ்.மாவட்டத்தில் 8 பேருக்கு தொற்று உறுதி..! வடக்கில் 13 பேருக்கு தொற்று..

யாழ்.மாவட்டத்தில் 8 பேர் உட்பட வடமாகாணத்தில் 13 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 248 போின் பீ.சி.ஆர் மாதிரிகள் இன்று பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் யாழ்.போதனா வைத்தியசாலையில் 410 போின் பீ.சி.ஆர் மாதிரிகள் இன்று பரிசோதிக்கப்பட்டது.

இதன்போது 13 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 8 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவனுக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சங்கானை சுகாதார மருத்துவ அதகாரி பிரிவில் வசிக்கும் மூவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

மானிப்பாய் வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அவர் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர். சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

யாழ்.மாநகரில் கருவாடு கடை உரிமையாளர் கடந்த வாரம் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நான்கு பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.

என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு