வடமாகாண காணி ஆவணங்கள் இன்று பிற்பகல் மீண்டும் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டது..! பணிப்பாளர் தி.விமலன் உறுதிப்படுத்தினார்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண காணி ஆவணங்கள் இன்று பிற்பகல் மீண்டும் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டது..! பணிப்பாளர் தி.விமலன் உறுதிப்படுத்தினார்..

யாழ்.மாவட்ட செயலகத்திலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்திலிருந்து அவசர அவசரமாக அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வடமாகாண காணி ஆவணங்கள் இன்று பிற்பகல் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்ட செயலகததிலுள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அண்மையில் அனுராதபுரம் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களினதும் ஆவணங்கள் இந்த அலுவலகத்தில் இருந்ததுடன், 

அதில் யாழ். மாவட்டத்திற்குரிய ஆவணங்களைத் தவிர ஏனைய மாவட்டங்களின் ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. எனினும், இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை தெரிவித்ததுடன், மக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஆவணங்கள் மீண்டும் இன்று பிற்பகல் தமது அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் தி.விமலன் தெரிவித்தார். 

தமது அலுவலகத்திற்கு கிடைத்திருந்த யாழ். அலுவலக ஆவணங்கள் இன்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டதாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடமத்திய வலய பிரதி பணிப்பாளர் W.M.பண்டாரவும் அதனை உறுதிப்படுத்தினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு