யாழ்.பல்கலைகழக பணியாளர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட 75 பேருக்கு யாழ்.பல்கலைகழகத்தில் இன்று பி.சி.ஆர் பரிசோதனை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக பணியாளர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட 75 பேருக்கு யாழ்.பல்கலைகழகத்தில் இன்று பி.சி.ஆர் பரிசோதனை..

யாழ்.பல்கலைகழக ஒழுக்காற்று அதிகாரி ஒருவருக்கும் மாணவர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பல்கலைகழக பணியாளர்கள், கொரோனா தொற்றுக்குள்ளான ஒழுக்காற்று அதிகாரி கடந்த 8ம் திகதி கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

மற்றும் பாடாசலை மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் குறித்த மாணவியின் வகுப்பு மாணவர்கள் உட்பட் 75 பேருக்கு இன்று யாழ்.பல்கலைகழக வளாகத்தில் பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கின்றது. 

நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு