கொரோனா அபாயம் நீங்கவில்லை..! பண்டிகை காலத்தில் தீவிர நடவடிக்கை, பொலிஸ் பேச்சாளர் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
கொரோனா அபாயம் நீங்கவில்லை..! பண்டிகை காலத்தில் தீவிர நடவடிக்கை, பொலிஸ் பேச்சாளர் மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்கள் பாதுகாப்பாக நடந்து கொள்ளவேண்டும். என கூறியிருக்கும் பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், தற்போது நாட்டில் கொவிட் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், 

கொவிட் அச்சுறுத்தல் நிலைமை இன்னும் மாற்றமடையவில்லை என்றார்.இந்நிலையில், பண்டிகைகளின் போது ஆடை மற்றும் பொருட்கள் கொள்வனவு செய்யும்போது 

மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும், வியாபார நிலைய உரிமையாளர்களும் நுகர்வோரின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான 

செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு