மெகா பட்ஜெட்டில் பாகுபலி 3!! -ஓ.டி.டி.யில் வெளியிட முடிவு-

ஆசிரியர் - Editor II
மெகா பட்ஜெட்டில் பாகுபலி 3!! -ஓ.டி.டி.யில் வெளியிட முடிவு-

மெகா பட்ஜெட்டில் உருவாகி அனைத்து மொழிகளிலும் சக்கைப்போடு போட்ட வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்த பாகுபலி படத்தின் 3 ஆம் பாகம் தற்போது தயாராகி வருகின்றது. 

பிரபல இயக்குனர்களில் ஒருவரான ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஸ்கா, தமன்னா, ரம்யாகிருஸ்ணன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு பாகுபலி படம் வெளிவந்தது. 

இதன் பின்னர் 2017 இல் வெளியான பாகுபலி படத்தின் 2 ஆம் பாகமும் வெற்றி பெற்றறு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்திய திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியது. 

இந்நிலையில், பாகுபலி படத்தின் 3 ஆம் பாகத்தை இயக்க ராஜமவுலி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆம் பாகத்தை 200 கோடி ரூபா பட்ஜெட்டில் 9 தொடர்களாக எடுக்க முடிவு செய்துள்ளார்களாம். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு