யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு 3521 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு 3521 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு..!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக்கு விவசாய அமைச்சினால் சுமார் 3521 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான ஜனாதிபதியின் சுபீட்சத்துக்கான நோக்கு கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அரசாங்கம் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

அரசாங்கத்தின் திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப் படுத்துவதற்காக நான் இங்கு கலந்துரையாடலில் பங்குபற்றியுள்ளேன்.

அதனடிப்படையில் விவசாய அமைச்சினால் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் யாழ்ப்பாண விவசாயிகள் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான நிலையம் ஒன்றை ஏற்படுத்த உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு