தொலைபேசி மோகம்..! திருமண வீட்டிற்கு சென்ற இளம்பெண் தடுக்கி விழுந்து மரணம். யாழ்.நாவாந்துறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தொலைபேசி மோகம்..! திருமண வீட்டிற்கு சென்ற இளம்பெண் தடுக்கி விழுந்து மரணம். யாழ்.நாவாந்துறையில் சம்பவம்..

யாழ்.நாவாந்துறை பகுதியில் திருமண வீட்டிற்கு சென்ற பெண் தடுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.உடவிலை சேர்ந்த பெண் ஒருவர் நாவாந்துறையில் திருமண வீட்டிற்கு வந்துள்ளார்.

திருமண வீட்டிற்கு வந்த பெண் யாழ்.நகரிலிருந்து 15 வயதான சிறுவனுடன் துவிச்சக்கர வண்டியில் நாவாந துறை சென்று கொண்டிருந்தபோது குறித்த சிறுவனும்,

உயிரிழந்த பெண்ணும் தொலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த நிலையில் தடுக்கி விழுந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்த பெண்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதுடன்,

சம்பவத்தில் உடுவில் பகுதியை சேர்ந்த சு.நிமலினி (வயது 42) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் தொடர்பான மரண விசாரணைகளை 

திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு