ஜனாதிபதியின் உத்தரவு..! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அவசர அவசரமாக சந்திக்கவுள்ள டக்ளஸ்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதியின் உத்தரவு..! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அவசர அவசரமாக சந்திக்கவுள்ள டக்ளஸ்..

ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவின் உத்தரவுக்கமைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து பேசவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ஆவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

தொலைபேசியில் அழைப்பெடுத்த ஐனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களை சந்தித்து அவர்களுடைய தேவைகள் என்ன? அவர்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள்?

என்ற விபரங்களுடன் தன்னை நேரில் சந்திக்குமாறு கூறியுள்ளார். இதற்கமைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை 3 நாட்களுக்குள் யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்து பேசுவதற்கு

திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை அமைச்சர் டக்ளஸ் எதிர்வரும் ஞாயிற்று கிழமை கொழும்பு செல்லவுள்ள நிலையில் சனிக்கிழமை சந்திப்பு இடம்பெறும் என கூறப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு