கண்ணீருடன் நல்லுாரில் திரண்ட மக்கள்..! சர்வதேசமே நீதியை தா.. என கோஷம்..

ஆசிரியர் - Editor I
கண்ணீருடன் நல்லுாரில் திரண்ட மக்கள்..! சர்வதேசமே நீதியை தா.. என கோஷம்..

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்தகோரி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து பேரணியாக, தற்போது சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாக சென்று நிறைவடைந்தது.

குறித்த போராட்டத்தில், வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் , பொதுமக்கள் , சிவில் சமூகத்தினர் , காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், 

அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு