பாடசாலை பேருந்து மீது புகைரதம் மோதிய சம்பவம் தொடர்பில் இருவர் கைது..! தொடர்ந்தும் தீவிர விசாரணையில் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
பாடசாலை பேருந்து மீது புகைரதம் மோதிய சம்பவம் தொடர்பில் இருவர் கைது..! தொடர்ந்தும் தீவிர விசாரணையில் பொலிஸார்..

தலைமன்னாரில் பாடசாலை பேருந்து மீது புகைரதம் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்துள்ளனர். 

நேற்றய தினம் தலைமன்னார் - பியர் பகுதியில் பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்து மீது புகைரதம் மோதி கோர விபத்து இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவத்தில் 09 வயதான பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் படுகாயமடைந்திருந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார், 

பாடசாலை சேவை பேருந்தின் சாரதி மற்றும் ரயில் பாதுகாப்பு கடவையின் கடமைநேர காவலாளி ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறினர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு