பண்டிகை காலத்தில் பயண கட்டுப்பாடு விதிக்கப்படலாம்..! மக்கள் சுகாதார நடைமுறைகை மதிப்பதே இல்லை, இராணுவ தளபதி காட்டம்..

ஆசிரியர் - Editor I
பண்டிகை காலத்தில் பயண கட்டுப்பாடு விதிக்கப்படலாம்..! மக்கள் சுகாதார நடைமுறைகை மதிப்பதே இல்லை, இராணுவ தளபதி காட்டம்..

பயண கட்டுப்பாடு விதிக்கும் தேவை எழுந்தால் அதனை உடன் நடைமுறைப்படுத்த தயங்கபோவதில்லை. என இராணுவ தளபதியும், கொவிட் 19 தேசிய செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கடந்த நத்தார் பண்டிகையின் பின்னர் இந்நாட்டு கொரோனா தொற் றாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்தமை அனைவரும் அறிந்த விடயம். இதன் ஊடாக பண்டிகை காலப்பகுதியில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதில்லை. 

என்பது உறுதியாகியுள்ள தாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு