வடக்கில் மேலும் ஒரு கொரோனா மரணம்..! கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சையின் வீடு திரும்பிய முதியவர் மரணம்..

ஆசிரியர் - Editor I
வடக்கில் மேலும் ஒரு கொரோனா மரணம்..! கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சையின் வீடு திரும்பிய முதியவர் மரணம்..

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய வயோதிபர் ஒருவர் மீண்டும் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் கூறியுள்ளார். 

மன்னாரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகத்தில் கடமையாற்றிய 86 வயதுடைய வயோதிபர் ஒருவரே, நேற்று (திங்கட்கிழமை) மதியம், இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உள்ளமை அடையாளம் காணப்பட்ட நிலையில், 

வயோதிபர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்த நிலையில், மீண்டும் வீடு திரும்பியுள்ளார். மேலும் அவர், சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, 

கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மதியம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு