வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் உள்ள காடுகளை கண்காணிக்க விசேட அதிரடிப்படை முகாம்கள்..! இராணுவமும் களமிறக்கப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் உள்ள காடுகளை கண்காணிக்க விசேட அதிரடிப்படை முகாம்கள்..! இராணுவமும் களமிறக்கப்படுகிறது..

தீவிரமான காடழிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுவரும் வன்னி மற்றும் சோமாவதி வனம், கிண்ணியா உள்ளிட்ட அடையாளப்படுத்தப்பட்ட காட்டு பகுதிகளில் விசேட அதிரடிப்படை முகாம்களை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த தகவலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் காடழிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்காக, இராணுவத்தின் ஒத்துழைப்பை பெறவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

காடழிப்பை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு துறைசார் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு