யாழ்.மாவட்டத்தில் 3வது கொரோனா மரணம் பதிவு..! தீவிர காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம், பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 3வது கொரோனா மரணம் பதிவு..! தீவிர காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம், பணிப்பாளர் தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 3வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

தீவிர காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குள் வசிக்கும் 75 வயதான பெண் ஒருவர்

நிமோனியா நிலைக்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் சடலம் தீவிர சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன்

யாழ்.கோப்பயன்மணல் மயானத்தில் மின் அணு மூலம் தகனம் செய்யப்பட்டிருப்பதாகவும் பணிப்பாளர் மேலும் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு