மன்னார் மீன் சந்தை வியாபாரிகள் 5 பேர் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உட்பட 14 பேருக்கே இன்று தொற்று, விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
மன்னார் மீன் சந்தை வியாபாரிகள் 5 பேர் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உட்பட 14 பேருக்கே இன்று தொற்று, விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் ஒருவர் உட்பட வடமாகாணத்தில் இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்களை மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். 

இதன்படி மன்னார் மாவட்டத்தில் 6 பேருக்கும், யாழ்.மாவட்டத்தில் ஒருவருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதில் மன்னார் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான 6 போல் 5 பேர் மன்னார் நகர மீன்சந்தை வியாபாரிகளாவர். 

மேலும் ஒருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவராவார். அதேபோல் யாழ்.மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டவராவார். 

இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் 7 பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைங்கப்பட்டிருந்தவர்களாவர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு