முதல் படித்தில் தேசிய விருது வென்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!!

ஆசிரியர் - Editor II
முதல் படித்தில் தேசிய விருது வென்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராகவும், முதல் படித்திலேயே தேசிய விருது வென்ற இயக்குனருமான இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் தனது 61 வயதில் காலமானார்.

இவரது இயக்கத்தில் வெளியான முதல் படம் இயற்கை தேசிய விருது வென்றது. இதன்பின் ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வரும் 'லாபம்' படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த வியாழ கிழமை மதியம் எடிட்டிங் பணிகளுக்கு இடையே வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார்.  நீண்ட நேரமாக அவர் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி இருந்துள்ளார்.

இதனால், அவரை உடனடியாக அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதித்தனர். மூளையில் ரத்த கசிவு ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவர் காலமானார்.  


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு