யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் உட்பட மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி..! விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவர் உட்பட மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று உறுதி..! விபரம் வெளியானது..

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருவர் உட்பட மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

இதன்படி யாழ்.உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவரும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்.

மேலும் யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து சென்றுள்ளார். 

மற்றையவர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்டவர். புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை பணியாளர் ஒருவர் 

கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள். இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். மேலும் மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு