வடமாகாண காணி ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டதன் பின்னணியில் நல்ல நோக்கம் இல்லவே இல்லை..!

ஆசிரியர் - Editor I
வடமாகாண காணி ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டதன் பின்னணியில் நல்ல நோக்கம் இல்லவே இல்லை..!

வடமாகாண காணி ஆவணங்களை அனுராதபுரத்திற்கு பகலில் கொண்டு போனார்களா? இரவில் கொண்டு போனார்களா? என்பதல்ல பிரச்சினை. கொண்டுபோனார்கள் என்பதே பிரச்சினையாகும். என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியிருக்கின்றார். 

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தனத பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து காணி ஆவணங்களை இரவில் கொண்டு போனார்களா? இரவில் கொண்டு போனார்களா? என்பதல்ல பிரச்சினை, 

காணி ஆவணங்களை கொண்டு போய்விட்டார்கள் என்பதே பிரச்சினை, வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களின் காணி அதிகாரங்களை அனுராதபுரத்திற்கு மாற்றும் இந்த அரசின் நிலைப்பாடு நல்ல நோக்கம் கொண்டதல்ல. 

எனக்கு கிடைத்துள்ள தகவல் இதுதான். ஆவணங்கள் அனைத்தும் போய் விட்டனவா இல்லையா என்பது தெரியவில்லை. இதுபற்றி நாடாளுமன்றத்தில் கேட்டறியலாம். என கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு