இந்திய நலன்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள்..! இனப்படுகொலைக்கான நீதியை இந்தியா கோரவேண்டும் என்கிறார் கஜேந்திரகுமார்..

ஆசிரியர் - Editor I
இந்திய நலன்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள்..! இனப்படுகொலைக்கான நீதியை இந்தியா கோரவேண்டும் என்கிறார் கஜேந்திரகுமார்..

இனப் படுகொலைக்கான பொறுப்புகூறலை இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தவேண்டும். என தமிழ்தேசிய மக்கள் முண்ணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார். 

இன்று காலை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பல்கேவுடனான சந்திப்பு யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றிருந்தது. இந்த சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே

அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இனப் படுகொலைக்கான பொறுப்புகூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்கை வகிக்க வேண்டும் என எடுத்து கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய பாதுகாப்பு நலன்களுக்கு தமிழர் தேசம் ஒரு கவசமாகவே இருக்கும் என்றும் நாம் இந்திய நலன்களுக்கு எதிரானவர்கள் அல்லர் என்றும் இதன்போது சுட்டிக்காட்டியதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு பூகோள அரசியல் போட்டியின் பகடைகளாக இலங்கையின் வடகிழக்கு பகுதியை இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு வழங்குவதை தாம் எதிர்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு