பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பிரதேசசபை உறுப்பினர்..! கறுப்பு துணிகட்டி எதிர்ப்பு போராட்டம்..

ஆசிரியர் - Editor I
பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட பிரதேசசபை உறுப்பினர்..! கறுப்பு துணிகட்டி எதிர்ப்பு போராட்டம்..

கிளிநொச்சி - கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் நாகேந்திரம் செல்வநாயகத்தை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைக்கு அழைத்தமையினை கண்டித்து சபை அமர்வில் அமைதி போராட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கரைச்சி பிரதேச சபை அமர்வு இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது சபையின் உறுப்பினர் இவ்வாறு விசாரணைக்காக அழைக்கப்பட்டமையை கண்டித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.யாரையும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு 

நாம் தடை அல்ல எனவும், அவ்வாறு விசாரணைக்கு உட்படுத்துவதாயின் கிளிநொச்சி மாவட்டத்திலேயே விசாரணைக்குட்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டு, குறித்த போராட்டத்தை முன்னெடுப்பதற்காக சபை உறுப்பினர் ஜீவராசா 

சபையிடம் கோரிக்கை முன்வைத்தார்.அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து சபை 5 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.இதன்போது சபை மண்டபத்தில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

குறித்த போராட்டத்தை செய்தி அறிக்கையிடுவதற்காக ஊடகவியலாளர்களிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரான நாகேந்திரம் செல்வநாயகம் இன்று கொழும்பில் உள்ள 

பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும், குறித்த செயற்பாடானது மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்து இன்றைய அமர்வில் பிரேரணையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்ததுடன், இன்றைய தினம் குறித்த பிரதேச சபை உறுப்பினர் விசேட விடுமுறை பெற்று விசாரணைகளிற்காக சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு