பெருமளவு போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத போதைப் பொருட்களுடன் 3 படகுகள் மற்றும் 19 இலங்கையர்கள் கைது..

ஆசிரியர் - Editor I
பெருமளவு போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத போதைப் பொருட்களுடன் 3 படகுகள் மற்றும் 19 இலங்கையர்கள் கைது..

சட்டவிரோதமான தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் 3 இலங்கை படகுகளை இந்திய கடலோர காவல் படையினர் கைப்பற்றியுள்ளனர். 

அகர்ஷா துவ, சது ராணி 03 மற்றும் சாது ராணி 08 ஆகிய படகுகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 19 நபர்களுடன் 

மார்ச் 5 திகதி மினிக்காய் தீவிலிருந்து ஏழு கடல் மைல் தொலைவில் இந்திய கடற்பரப்பில் பயணித்த இந்த மூன்று இலங்கை படகுகளும் வராஹா என்ற 

இந்திய கடற்படையினருக்கு சொந்தமான கப்பல் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.இதன்போது இந்திய காவல்படையினர் குறித்த மூன்று படகுகளையும் சோதனையிட்டபோது, 

அங்கீரிக்கப்படாத தகவல்தொடர்பு உபகரணங்கள், போதைப்பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.  அதன் பின்னர் விரிவான விசாரணைக்காக படகுகள் 

ஞாயிற்றுக்கிழமை விஜின்ஜாம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.இந்த படகுகளிலிருந்து 200 கிலோ கிராம் ஹெரோயினும், 

60 கிலோ கிராம் ஹாஷிஷ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு