சென்னை செல்லவுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!!

ஆசிரியர் - Editor II
சென்னை செல்லவுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!!

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 3 நாட்கள் உத்தியோக பூர்வவிஜயமாக எதிர்வரும் 9 ஆம் திகதி சென்னைக்கு செல்லவுள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் அவர், அன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.

தொடர்ந்து எதிர்வரும் 10 ஆம் திகதி காலை, சென்னையில் இருந்து உலங்குவானூர்தி மூலம் வேலூரிலுள்ள பொற்கோவிலுக்கு செல்கிறார். பின்னர் தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 

இதேவேளை எதிர்வரும் 11 ஆம் திகதி காலை, சென்னை அண்ணா பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் பிற்பகல் தனி விமானத்தில் டெல்லி திரும்ப உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு