பெரியார் சிலைக்கு தீவைத்த மர்ம நபர்கள்!! -அவமதிப்பை எதிர்த்து போராட்டம்-

ஆசிரியர் - Editor II
பெரியார் சிலைக்கு தீவைத்த மர்ம நபர்கள்!! -அவமதிப்பை எதிர்த்து போராட்டம்-

கிருஸ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம் மாவட்டம் கத்தாழைமேடு அருகே உள்ள சமத்துவபுரத்தில் பெரியாரின் வெண்கல சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெரியாரின் வெண்கல சிலைக்கு டயர் அணிவித்து தீ வைத்து அவமதிப்பு செய்த நபர்களை கைது செய்யக்கோரி அப்பகுதியில் உள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு